குடிபோதையில் தகராறு செய்தவர் அடித்து கொலை : மனைவி உட்பட 3 பேரிடம் விசாரணை

குடிபோதையில் தகராறு செய்தவர் அடித்து கொலை :  மனைவி உட்பட 3 பேரிடம் விசாரணை
Updated on
1 min read

உதகை க்ரீன்பீல்டு பகுதியை சேர்ந்த ஜான்பால் (40) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஸ்லின் மேரி (33). ஜான்பாலுக்குகுடிப்பழக்கம் இருந்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், கணவருடன் கோபித்துக்கொண்டு, புதுமந்து சாலையில் அமைந்துள்ள தனது தாயார் வசிக்கும் வீட்டுக்கு ரோஸ்லின்மேரி சென்றுள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் அங்கு சென்ற ஜான்பால், மனைவி ரோஸ்லின் மேரியைகுடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ரோஸ்லின்மேரியை ஜான்பால் தாக்க முயன்றுள்ளார். இதை தடுத்து ரோஸ்லின்மேரி, அவரது தாய் நிஷி (52), சகோதரிக்ளாரா (39) ஆகியோர், ஜான்பாலை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜான்பால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பி1 காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ரோஸ்லின்மேரி, நிஷி, க்ளாரா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in