கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேர் கைது :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேர் கைது  :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் உள்ள குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தேடப்பட்டனர். வழக்குகளில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர்கள், குற்ற பின்னணி கொண்டவர்கள், ரவுடிகள் என மொத்தம் 80 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் அனைத்து ரவுடிகளையும் கைது செய்ய மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ரவுடிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in