காஞ்சிபுரத்தில் மாணவருக்கு கரோனா தொற்று :

காஞ்சிபுரத்தில் மாணவருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகேஉள்ளது சுப்புராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசிரியர்கள் தேர்தல் பணி தொடர்பான பயிற்சியில் பங்கேற்க உள்ளதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிக்கப்பட்ட மாணவருடன் தொடர்பில் இருந்தமாணவர்களுக்கு செப். 25-ம் தேதி (நாளை) கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in