பாளை. ஜவஹர் திடலில் தற்காலிக கடைகள் அமைப்பு :

பாளை. ஜவஹர் திடலில்  தற்காலிக கடைகள் அமைப்பு :
Updated on
1 min read

பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கியது.

பாளையங்கோட்டை மார்க்கெட்டிலுள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்திலும், தற்போது இயங்கிவரும் பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்திலும் தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் ஜவஹர் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல்வகாப், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in