

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள 123 உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் 488 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி பதவிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, 10 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு நேற்று, ஒரேநாளில் 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மேலும், கிராம ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிகளுக்கும் பலர் மனு தாக்கல் செய்தனர். 35 பதவிகளுக்கு மொத்தம் 172 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று ( 23-ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனையும், வேட்புமனுக்களை திரும்பப் பெற 25-ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளர்
ஈரோட்டில் 106 பேர் தாக்கல்
நேற்று முன் தினம் வரை 43 மனுக்கள் மட்டுமே தாக்கலான நிலையில், வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாளான நேற்று, 63 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நாமக்கல்லில் 109 பேர் மனு
கிருஷ்ணகிரியில் 66 பேர் மனு
தருமபுரியில் 35 பேர் மனு