நிலப் பிரச்சினையில் இருதரப்பினர் மோதல் : பெண் உட்பட 8 பேருக்கு அரிவாள் வெட்டு :

நிலப் பிரச்சினையில் இருதரப்பினர் மோதல் : பெண் உட்பட 8 பேருக்கு அரிவாள் வெட்டு :
Updated on
1 min read

இதனிடையே சர்ச்சைக்குரிய இடத்தை இருதரப்பினரும் சுத்தம் செய்வது, கல்தூண்களை ஊன்றுவது, கொட்டகை அமைப்பது என மாறி, மாறி செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் அரிவாளால் வெட்டினர். இதில் தெய்வானை தரப்பைச் சேர்ந்த பானுமதி, சூர்யா, செல்வம், காளிமுத்து ஆகிய 4 பேரும், சாமி அய்யா தரப்பில் ராஜ்குமார், மணி, ராமநாதன், சாமி அய்யா ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அவர்களில் செல்வம் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மேலக்காவனவயலில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in