பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த ஆண் நண்பர் கைது :

பெண்ணை கல்லால் தாக்கி  கொலை செய்த ஆண் நண்பர் கைது :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை அடுத்த அ.மேட்டூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜயன் மனைவி புஷ்பா(43). விஜயன் இறந்துவிட்ட நிலையில், இவர்களின் 2 குழந்தைகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். புஷ்பா தனது தாயார் பெருமாயி உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், செப்.7 அன்று அரும்பாவூரில் உள்ள வங்கிக்கு செல்வதாகக் கூறிச் சென்ற புஷ்பா வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக, பெருமாயி அளித்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அன்னமங்கலம் வனப் பகுதியில் அழுகிய நிலையில் புஷ்பாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், புஷ்பாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ் மகன் சோலைமுத்து(45) என்பவருக்கும் கூடாநட்பு இருந்ததும், கடந்த செப்.7-ம் தேதி அன்னமங்கலம் வனப்பகுதியில் இருவரும் சந்தித்தபோது, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய புஷ்பாவை சோலைமுத்து கல்லால் தாக்கி கொலை செய்ததுடன், புஷ்பா வைத்திருந்த சுயஉதவிக்குழு பணம் ரூ.25,700-ஐ எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, செல்லமுத்துவை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in