திருச்சி மாவட்டத்தில் நீர்வழித்தடங்களை சீரமைக்கும் பணி தீவிரம் :

திருச்சி மாவட்டத்தில் நீர்வழித்தடங்களை சீரமைக்கும் பணி தீவிரம் :
Updated on
1 min read

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு, நீர் வழித்தடங்களை செப்.20 முதல் செப்.26 வரை சீரமைக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நீர்வழித்தடங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கழிவுநீர் கால்வாய்களில் கழிவு நீர் தேங்காமல் சுத்தம் செய்யப்படும்.

மேலும், சிறுபாலங்கள், குழாய் பாலங்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் செல்லும் வகையில் அடைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஊரணிகளில் மழைநீர் தேங்கும் வகையில் அடைப்புகள் இருப்பின் அதனை அவ்வப்போது சுத்தம் செய்யவும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in