3,600 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்; திருச்சியில் 2 பேர் கைது :

3,600 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்; திருச்சியில் 2 பேர் கைது :
Updated on
1 min read

திருச்சி சஞ்சீவி நகர் நேரு நகர் பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோ ஆகியவற்றை டிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் உள்ளிட்டோரைக் கொண்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை செய்தனர். அதில், 3,600 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு நின்று கொண்டிருந்த பாலக்கரை ஆலம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (41), முதலியார் சத்திரம் கெம்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (39) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் மண்ணெண்ணெயை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், 3,600 லிட்டர் ரேஷன் மண்ணெண் ணெய்யுடன் டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

சிறப்பாக செயல்பட்ட திருச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார், எஸ்.பி பாஸ்கரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in