கரூரில் வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் :

கரூரில் வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்  :
Updated on
1 min read

கரூர் நகராட்சி பகுதியில் நடைபெறும் வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்னஆண்டாங்கோவில் இரட்டை வாய்க்கால், திண்ணப்பா திரையரங்கம் அருகில் உள்ள திட்ட சாலை கழிவுநீர் வாய்க்கால்கள், வேலுச்சாமிபுரம் ராஜ வாய்க்கால் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து, ‘‘மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் இப்பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிக்கப்படும்’’ என்றார்.

கரூர் நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, வட்டாட்சியர் சக்திவேல், உதவி பொறியாளர்கள் கார்த்திக், தங்கவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in