இலங்கையில் இருந்து ஆட்களை கடத்தி வர பயன்படுத்திய படகு பறிமுதல் :

இலங்கையில் இருந்து ஆட்களை கடத்தி வர பயன்படுத்திய படகு பறிமுதல் :
Updated on
1 min read

இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆட்களை கடத்தி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட படகை மதுரை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், கடல் அட்டை, வெங்காய விதை, பீடி இலை போன்ற பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இதனால், போலீஸார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன. சமீபகாலமாக ஆட்களை கடத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இலங்கையைச் சேர்ந்த 40 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு படகில் வந்துள்ளனர். பின்னர், மங்களூருக்கு சென்று, அங்கிருந்து கனடா செல்ல இருந்த போது பிடிபட்டனர். இதேபோன்று மதுரை அருகே இலங்கையைச் சேர்ந்த 27 பேரை மதுரை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்ததும், அங்கிருந்து மதுரைக்கு சென்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த கருத்தக்கண்ணு, சாக்ரடீஸ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், இலங்கையில் இருந்து வந்தவர்களில் கணவன், மனைவி ஆகிய 2 பேர் மாயமானார்கள். அவர்களை மதுரை கியூ பிரிவு போலீஸார், தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் பகுதியில் கடந்த சில் நாட்களுக்கு முன்பு மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுதூத்துக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரை கியூ பிரிவுஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் தூத்துக்குடிக்கு வந்து கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகை பறிமுதல் செய்து, லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர்.

இலங்கையைச் சேர்ந்த 40 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு படகில் வந்துள்ளனர். பின்னர், மங்களூருக்கு சென்று, அங்கிருந்து கனடா செல்ல இருந்த போது பிடிபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in