திண்டுக்கல் அருகே தந்தையை கொன்ற மகன் கைது :

திண்டுக்கல் அருகே தந்தையை கொன்ற மகன் கைது :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே சொத்துக்காக தந் தையை கொலை செய்த மகன் மற்றும் அவரது 2 நண்பர்களை போலீஸார் கைது செய்தனர்.

சின்னாளபட்டி அருகே செட்டியபட்டி யானைவிழுந்தான் ஓடை அருகில் உள்ள ரயில் பாதையில் செப்.18-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடந்தது. விசாரணையில், இறந்து கிடந்தவர் ஏ.வெள்ளோட்டைச் சேர்ந்த ஜெரால்டுதங்கராஜ் என தெரிய வந்தது.

இதுகுறித்து அம்பாத்துரை போலீ ஸார் விசாரணை நடத்திவந்தனர். இதில் இறந்தவரின் மகன் கிஷோர், சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து கிஷோர்(21), அவரது நண்பர்கள் ஆறுமுகப்பாண்டியன் (21), பிராங்க்லின் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in