தேர்தல் பறக்கும் படை சோதனையில் - சங்கராபுரம் அருகே வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் :

தேர்தல் பறக்கும் படை சோதனையில்  -  சங்கராபுரம் அருகே வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்  :
Updated on
1 min read

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த தனிவட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையி லான அலுவலர்கள், நேற்று திருவண்ணாமலைநோக்கி சென்ற காரை மூங்கில்துறைப் பட்டு சர்க்கரை ஆலை அருகே நிறுத்திசோதனையிட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.57 ஆயிரம் ரொக்கம், 2 கிலோ புதுவெள்ளி, 4 கிலோ பழைய வெள்ளிப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதை யடுத்து அதை எடுத்துச் சென்ற நபரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், அவர் சங்கராபுரத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்தையும், வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர்கள், அவற்றை சங்கராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in