

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் மறியல் போராட்டம் நடத்ததொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள போராட்டம் குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் விளக்கினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 23, 24-ம் தேதி ஆகிய இருநாட்கள், மத்திய தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டு, 25 ஆயிரம் துண்டறிக்கைகள் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
ரயில் மறியல்