போளூரில் பறிமுதல் செய்த : 762 மதுபாட்டில்கள் அழிப்பு :

போளூரில் பறிமுதல் செய்த  : 762 மதுபாட்டில்கள் அழிப்பு  :
Updated on
1 min read

போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட 762 போலி மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு காவல்துறை மூலம் 762 போலி மதுபாட்டில்கள் கடந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மதுபாட்டில்களை அழிக்க காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, போளூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா, போளூர் சிறப்பு வருவாய் ஆய்வாளர் ரகுபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வினோத் முன்னிலையில் கரைப்பூண்டி கிராமத்தில் உள்ள செய்யாற்றங்கரையில் ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in