‘அரியரால்’ மன உளைச்சல் - ஒட்டன்சத்திரம் மருத்துவ மாணவர் தற்கொலை :

ரஞ்சித் குமார்
ரஞ்சித் குமார்
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னமண்டவாடியைச் சேர்ந்த நாச்சிமுத்துவின் மகன் ரஞ்சித்குமார் (24). திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல் லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்தார்.

விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று முன்தினம் மாலையிலிருந்து அறைக்கதவை திறக்கவில்லை. சந்தேகத்தில் நண்பர்கள், நேற்று காலை அறையின் பின்பகுதி ஜன்னல் வழியாகப் பார்த்தனர். அப்போது, ரஞ்சித் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ரஞ்சித்குமார் 4-வது ஆண்டு படிக்கும்போது ஒரு பாடத்தில் அரியர் விழுந்தது. அடுத்த 2 மாதத்தில் அதை எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டார்.

ரஞ்சித்குமாரின் நண்பர்கள் கடந்த ஏப்ரல் மாதமே படிப்பை முடித்து வெளியேறிவிட்டனர். அரியர் காரணமாக ரஞ்சித்குமாருக்கு பயிற்சிக் காலம் அக்டோபர் வரை தள்ளிப்போயுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற் கொலை செய்து கொண்டுள்ளார்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in