கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - 57 பேருக்கு கரோனா தொற்று : ஒருவர் உயிரிழப்பு

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் -  57 பேருக்கு கரோனா தொற்று  :  ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் இம்மாவட்டத்தில் 62,900 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 58 பேர் உட்பட 61,660 பேர் சிகிச் சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 851 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரையில் 45,161 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 17 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 44,595 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி யுள்ளனர்.

தற்போது 214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 352 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in