மொபட் மீது லாரி மோதி தாய், மகள் மரணம் :

மொபட் மீது லாரி மோதி தாய், மகள் மரணம் :
Updated on
1 min read

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய் நகரைச் சேர்ந்த காளிதாஸ் மனைவி உமையூர்கனி (32). இவர்களது மகள் எஸ்தர்(11). உமையூர்கனி நேற்று மாலை தெர்மல் நகர் கேம்ப்-1 பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகளுடன் மொபட்டில் சென்றார். திருச்செந்தூர் சாலையில் துறைமுக ரவுண்டானாவில் கேம்ப்-1 பகுதிக்கு திரும்பிய போது, தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்தலாரி, மொபட் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த எஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த உமையூர்கனியை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்தார். இது தொடர்பாக தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in