திருப்பூர் எஸ்பி கார் கவிழ்ந்து விபத்து :

திருப்பூர் எஸ்பி கார் கவிழ்ந்து விபத்து :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், சென்னை உயர் நீதிமன்றத்தில்நடந்த வழக்கு விசாரணைக்கு காரில்சென்றுவிட்டு, நேற்று திருப்பூர் திரும்பிக்கொண்டிருந்தார். அதிகாலை செங்கப்பள்ளி புறவழிச்சாலை பல்லேகவுண்டம்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென முன்பக்க டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்தது. சீட் பெல்ட் அணிந்திருந்ததால் எஸ்.பி.யும், ஓட்டுநரும் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீஸார், அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருவரையும் மீட்டு வேறொரு வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in