‘அண்ணாவின் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்’ :

‘அண்ணாவின் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்’ :
Updated on
1 min read

அண்ணாவின் நுங்கம்பாக்கம் இல்லத்தை, நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மதிமுக மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அண்ணா கடைசியாக வாழ்ந்த இல்லம், அவென்யூ 9, நுங்கம்பாக்கம் சென்னை என்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அண்ணா இயற்கை எய்திய பின்னர் அவருடைய உடல், நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டு, அதன்பின்னரே சென்னை அரசினர் தோட்டத்துக்கு எடுத்துவரப்பட்டு, பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அண்ணா கடைசியாக வாழ்ந்த இல்லம், இதுவரை அரசுடமை ஆக்கப்படாதது பெரும் குறை. அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in