கிருஷ்ணகிரி அணையில் தீயணைப்பு மீட்புப் படையினர் ஒத்திகைப் பயிற்சி :

கிருஷ்ணகிரி அணையில் தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் சார்பில் அணையில் மூழ்கியவரை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அணையில் தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் சார்பில் அணையில் மூழ்கியவரை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அணையில் தீயணைப்பு மீட்புப் படையின் ஒத்திகைப் பயிற்சி நடந்தது.

கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்புப் படையின் சார்பில், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு எச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகைப் பயிற்சி கிருஷ்ணகிரி அணையில் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தின் நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில் பணியாளர்கள், ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில், பருவ மழையின் போது நீர் நிரம்பி வரும் சூழலில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க அவர்களை காப்பாற்றுவதற்காகவும், நீரில் அடித்துச் செல்பவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தொடர்பாகவும் ஒத்திகை பயிற்சி செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பருவமழை காலத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கிருஷ்ணகிரி அணைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in