தூத்துக்குடி மாவட்டத்தில் 40% விவசாயிகளுக்கு - வெள்ள நிவாரண நிதி கிடைக்கவில்லை : ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் புகார்

வெள்ள நிவாரண நிதி வழங்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழ் விவசாயிகள் சங்கத்தினர்.
வெள்ள நிவாரண நிதி வழங்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழ் விவசாயிகள் சங்கத்தினர்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீத விவசாயிகளுக்கு வெள்ளநிவாரண நிதி இதுவரை கிடைக்கவில்லை என்று தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்ததால் பயிர்கள் அனைத்தும் மூழ்கி அழுகி சேதமடைந்துவிட்டன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீத விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண நிதி இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வெள்ள நிவாரண நிதியைவழங்க வேண்டும். மேலும், பயிர்காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவித குளறுபடியும் இல்லாமல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதி சான்றிதழ்

இதுபோல் தமிழ்நாடு சோழகுல வாதிரி ராசாக்கள் சமுதாய சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘தேவேந்திர குல வேளாளர் பிரிவில் இருந்து வாதிரியார் சமுதாயத்தை விடுவிக்க வேண்டும். வாதிரியார் சமுதாயத்தினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்று சாதி சான்றிதழ் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். வாதிரியார் பெயரில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

100 நாள் வேலை திட்டம்

விஷவண்டுகள் தொல்லை

கண்டீசுவரர் ஆலயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in