புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்திய இருவரை கள்ளக்குறிச்சி போலீஸார் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடந்த மாதம் 21-ம் தேதி உளுந்தூர்பேட்டை போலீஸார் அன்னை தெரஸா நகர் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற உளுந்தூர்பேட் டையைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் வாகனத்தை சோதனை நடத்தினர். அவரிடம் 720 கிலோ ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைதுசெய்தனர். அவருக்கு உடந்தை யாக இருந்த கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இருவரின் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கள்ளக் குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் உத்தரவின் கீழ் மேற்கண்ட இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in