சேலையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு :

சேலையில் தீப்பற்றி  மூதாட்டி உயிரிழப்பு  :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் வசிப்பவர் கோபி மனைவி வசந்தா(60). இவர், நேற்று முன் தினம் வழிபாடு செய்வதற்காக கற்பூரம் ஏற்றியதாகவும், அப்போது அவரது சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசந்தா கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர், உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இது குறித்து வேட்டவலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in