திருவாரூரில் - குரு தட்சிணாமூர்த்தி 186-ம் ஆண்டு குருபூஜை :

திருவாரூரில் -  குரு தட்சிணாமூர்த்தி 186-ம் ஆண்டு குருபூஜை  :
Updated on
1 min read

திருவாரூர் மடப்புரம் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் 186-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இங்கு ஜீவ சமாதி அடைந்ததையடுத்து, இந்த குருபூஜை விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. விழாவையொட்டி, நேற்று யாகசாலையில் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீரை வேதவிற்பன்னர்கள் கலசங்களில் எடுத்துவந்து,

சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் பால் குடங்களை சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரோனா பரவல் காரணமாக, விழாவில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in