மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு :

மின்சாரம் பாய்ந்து  2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆர்.குமாரவேல்(45). பெரியார் நகரைச் சேர்ந்தவர் சி.சுந்தரம்(65). சுமை தூக்கும் தொழிலாளர்களான இவர்கள் இருவரும், நேற்று வேலை முடித்துவிட்டு, கீரமங்கலம் மாரி யம்மன் கோயில் அருகே உள்ள குளத்துக்கு குளிக்க சென் றனர். குளத்தை சுற்றி அமைக் கப்பட்டுள்ள கம்பி வேலியை பிடித்தபோது அதன் வழியே மின்சாரம் பாய்ந்ததில் குமார வேல், சுந்தரம் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

குளக்கரையில் உள்ள மின் விளக்குகளுக்கு சென்ற மின் வயர் வழியாக மின் கசிவு ஏற்பட் டிருக்கலாம் என கூறப்படுகி றது. இதுகுறித்து கீரமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in