ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது :

ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

ஏரல் அருகே மூதாட்டியை கொலைசெய்து நகைகளை பறித்துச் சென்றவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஏரல் அருகே வாழவல்லான் மேலூர் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி முத்துக்கிளி (74). கடந்த மாதம் 3-ம் தேதி இவர் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 9.5 பவுன் தங்க நகைகள் பறிக்கப்பட்டன. இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகராஜ் (46) என்பவரை கைது செய்தனர். ஆறுமுகராஜ் மீது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கும், சென்னையில் கொலை முயற்சி வழக்கும் உள்ளது.

எஸ்.பி.ஜெயக்குமார் பரிந்துரை யின் பேரில் ஆறுமுகராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், உத்தரவிட்டார். இதன் பேரில்ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாஆறுமுகராஜை குண்டர் சட்டத்தில்கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

வாழவல்லான் மேலூர் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி முத்துக்கிளி (74). கடந்த மாதம் 3-ம் தேதி இவர் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 9.5 பவுன் தங்க நகைகள் பறிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in