பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட கோரிக்கை :

வேலூர் பாலாற்றில் இருந்து சதுப்பேரி ஏரி, பெரிய ஏரி, கடப்பேரி, தொரப்பாடி ஏரிகளுக்கு  தண்ணீர் திருப்பிவிட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் பாலாற்றில் இருந்து சதுப்பேரி ஏரி, பெரிய ஏரி, கடப்பேரி, தொரப்பாடி ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், ‘‘வேலூர் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக பாலாறு உள்ளது. விரிஞ்சிபுரம் பகுதியில் தடுப்புச் சுவர் சிதிலமடைந்துள்ளதால் தற்போது பாலாற்றில் தண்ணீர் வரத்து இருந்தும் ஏரிகளுக்குச் செல்லவில்லை. இதனால், சதுப்பேரி மற்றும் பெரிய ஏரி, கடப்பேரி, தொரப்பாடி ஏரிக்கு நீர்வரத்து இல்லை என்பதால் உடனடியாக தண்ணீரை மடை மாற்றி ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in