கேரளாவில் வீட்டு வேலை செய்த தமிழக சிறுமிகள் மீட்பு :

கேரளாவில் வீட்டு வேலை செய்த தமிழக சிறுமிகள் மீட்பு :
Updated on
1 min read

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, திருச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆகியோர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரில் வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.எர்ணாகுளம் குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினர் 2 சிறுமிகளையும் மீட்டு தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அச்சிறுமிகளை தற்காலிகமாக காப்பகத்தில் வைக்கவும், பெற்றோரின் பொருளாதார மேம்பாட்டுக்கு உரிய வழிவகை செய்யவும் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in