சிறை கைதி மரணத்தில் சந்தேகம் : பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு

சிறை கைதி மரணத்தில் சந்தேகம் :  பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

தென்காசி தங்கபாண்டியன் மகன் கட்டிசாமி(40). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 30-ம் தேதி தனிமைப்படுத்துவதற்காக அவிநாசி கிளைச் சிறையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தவர், நேற்று முன் தினம் உடல் நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்ட கட்டிசாமி உயிரிழந்தார்.

அவரது சடலம், திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. ஆனால், அவரது உடலில் காயங்கள் இருப்பதால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வரை, எங்கள் போராட்டம் தொடரும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in