சாம்பவர்வடகரையில் கடைகள் அடைப்பு :

சாம்பவர்வடகரையில் கடைகள் அடைப்பு :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். இந்நிலையில் சுரண்டைபேரூராட்சியை நகராட்சியாக்கும் அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியானது. இதனால்,சுரண்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் 8 கி.மீ. சுற்றளவில் உள்ளபேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சாம்பவர்வடகரை பேரூராட்சியை, சுரண்டைநகராட்சியுடன் இணைக்க அங்குள்ள பொது மக்களும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். நேற்று, சாம்பவர்வடகரையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இங்குள்ள, 300-க்கும் மேற்பட்ட கடைகள்அடைக்கப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in