Regional03
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனி அருகில் போக்குவரத்து சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் தலைமை வகித்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது என வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல், செங்கோட்டை உட்பட பல்வேறு பணிமனைகள் அருகில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
செங்கோட்டை உட்பட பல்வேறு பணிமனைகள் அருகில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
