தி.கோடு அரசு மருத்துவமனையில் கழிவுகளை அகற்ற எம்எல்ஏ உத்தரவு :

தி.கோடு அரசு மருத்துவமனையில் கழிவுகளை அகற்ற எம்எல்ஏ உத்தரவு :
Updated on
1 min read

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும், என எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்தார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் ஆங்காங்கே குப்பைகள் கிடப்பதையும், கழிவறைகள் தூய்மை இல்லாமலும் காணப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுகள் நீண்ட நாட்களாக எடுக்கப்படாமல் பிணவறைக்கு எதிரே உள்ள பகுதியில் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்த எம்எல்ஏ ஈஸ்வரன், தூய்மைப் பணிக்காக ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் மற்றும் பணியாளர்களை அழைத்து கழிவுகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும், மருத்துவக் கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in