திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா :

திரவுபதி அம்மன் கோயிலில்  தீமிதி திருவிழா :
Updated on
1 min read

கீழப்பழுவூர் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன், தனது பரிவாரங்களுடன் சிறிய தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர், கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in