கிரேனிலிருந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு :

கிரேனிலிருந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு :
Updated on
1 min read

திருச்சி புத்தூர்-தென்னூர் சாலையில் தனியார் வணிக நிறுவன கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் 3-வது மாடியில் பெரிய அளவிலான கண்ணாடிகளைப் பொருத்தும் பணிகள் நேற்று நடைபெற்றன.

இதற்காக காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார்(25), வாசன் சிட்டி பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார்(25) ஆகியோர் ராட்சத கிரேனில் நின்றபடி கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராமல் கிரேனின் உச்சியில் ஆட்கள் நின்று வேலைபார்ப்பதற்கான பெட்டி போன்ற பகுதி கழன்று கீழே விழுந்தது. இதில், படுகாயமடைந்த செல்வக்குமார், சரவணக்குமார் ஆகிய இருவரை யும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத் துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது செல்வக்குமார் ஏற்கெ னவே இறந்துவிட்டது தெரிய வந்தது. படுகாயத்துடன் இருந்த சரவணக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in