பழநியில் : குண்டர் சட்டத்தில் : 2 பேர் கைது :

பழநியில்  : குண்டர் சட்டத்தில் : 2 பேர் கைது :
Updated on
1 min read

பழநியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன்(40) என்பவரை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் பரிந்துரை யின்பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ச.விசாகன், உத்தரவிட்டார்.

அதேபோல், வேடசந்தூர் நகரில் உள்ள ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாகக் கூறி மூதாட்டியை ஏமாற்றி ரூ.56 ஆயிரத்தை திருடிய ஆபேல் (27) என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in