பால்காரரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலி பறிப்பு :

பால்காரரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலி பறிப்பு :
Updated on
1 min read

கரூர் அருகேயுள்ள மூக்கணாங்குறிச்சியை அடுத்த வால்காட்டுபுதூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி(43), பால்காரர். இவர் வடிவேல்நகர் முனியப்பன் கோயில் அருகே நேற்று காலை இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் பாலசுப்ரமணியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து கரூர் நகர போலீஸில் பாலசுப்ரமணி அளித்த புகாரின்பேரில், கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in