நிதி நிறுவன பண மோசடி வழக்கை விசாரித்த தனிப்படை எஸ்ஐ பணியிடமாற்றம் :

நிதி நிறுவன பண மோசடி வழக்கை விசாரித்த தனிப்படை எஸ்ஐ பணியிடமாற்றம் :
Updated on
1 min read

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்திய ஹெலிகாப்டர் சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் பண மோசடியில் ஈடுபட் டதாக பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜூலை முதல் வாரத்தில் போலீஸில் புகார் அளித்தனர்.

ஆனால், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க, போலீஸ் அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன்பின், இந்த சம்பவம் தொடர்பாக ஜூலை இறுதியில் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டைக்கும், அதன்பின், அங்கிருந்து மதுரை பட்டாலியனுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல, தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சோமசுந்தரம், நாகை மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வந்த கிரைம் பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் கண்ணனை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்து தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in