காவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு :

காவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு :
Updated on
1 min read

தஞ்சாவூர் பூக்கார முதல் தெருவைச் சேர்ந்தவர் சத்திய மூர்த்தி(48). சென்னையில் போக் குவரத்துப் போலீஸ்காரராக பணியாற்றும் இவர் தஞ்சை ஞானம் நகரில் கட்டியுள்ள புதிய வீட்டில் 20-ம் தேதி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். அங்கு குடும்பத்துடன் தங்கி விட்டு, நேற்று காலை பழைய வீட்டுக்கு வந்தபோது, அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, தஞ்சாவூர் தெற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in