விவசாயி கொலை: 2 பேர் கைது :

விவசாயி கொலை: 2 பேர் கைது  :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிரா மத்தைச் சேர்ந்தவர் செல்வ குமார்(58). விவசாயி. இவரது மனைவி 8 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கணவரை விட்டு பிரிந்து வசித்து வந்த செல்வகுமாரின் தாய்மாமன் மகளான பூங்குடிக் காடு கிராமத்தைச் சேர்ந்த சுதா(44) என்பவருடன் செல்வ குமாருக்கு கூடா நட்பு ஏற்பட் டுள்ளது. மேலும், செல்வகு மாரின் உறவினரான பூங்குடிக் காடு ராமலிங்கம்(38) என்ப வருடனும் சுதாவுக்கு கூடா நட்பு இருந்துள்ளது. இதனால், செல்வகுமாருக்கும் ராமலிங் கத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கறம்பக்காடு மயானம் அருகே நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த செல்வ குமாரை வழிமறித்து ராமலிங்கம் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், அந்த இடத்திலேயே செல்வகுமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து சேதுபாவாசத்தி ரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமலிங்கம், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சுதா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in