தீக்குளித்து இளைஞர் தற்கொலை :

தீக்குளித்து இளைஞர் தற்கொலை :
Updated on
1 min read

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி மகன் சத்யநாராயணன்(26). இவர் திருநின்றவூரில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி வடபழனியில் உள்ள மடத்தில் சமையலராக பணிபுரிந்து வந்தார்.இச்சூழலில், சத்யநாராயணன் நேற்று அதிகாலை பைக்கில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை மேம்பாலத்துக்கு வந்தார். அங்கு, பைக்கிலிருந்து பெட்ரோலை கேனில் பிடித்து உடலின் மீது ஊற்றி தீக்குளித்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீஸார், சத்யநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in