திருக்கோவிலூர் நகராட்சியாக தரம் உயர்த்த திட்டம் - ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு :

திருக்கோவிலூர் பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திருக்கோவிலூர் பேரூராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated on
1 min read

திருக்கோவிலூரை நகராட்சியாக தரம் உயர்த்தும் நோக்கில், அதன் அருகில் உள்ள சில ஊராட்சிகளை அதனுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அக்கிராமமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நகர்புற வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கனகநந்தல் , மேல தாழனூர் ,கீழ தாழனூர் ,அரும்பாக்கம் ஆகிய கிராமங்களை திருக்கோவிலூர் பேரூராட்சியுடன் இணைக்க முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறு செய்தால் இக்கிராம மக்கள் பயன்பெற்று வரும் 100 நாள் வேலை உறுதித் திட்டம், கிராமப்புற விவசாயிகளுக்கு கிடைக்க பெறும் அரசின் திட்டங்கள் கிடைக்காததுடன், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நேற்று இக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பி.என்.தரிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in