கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் 102 பேருக்கு கரோனா :

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் 102 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களைச் சேர்த்து 44,587 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 49 பேர் குணமடைந்தனர். 43,906 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று 29,880- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் தொற்று 61,939-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 830 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in