வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டதால் - தற்காலிக செவிலியர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு : பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை

பேருந்து வசதி கோரி மணப்படை வீடு கிராம மக்களும், (வலது) அடிப்படை வசதிகள் கோரி குன்னத்தூர் கிராம மக்களும், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். 				         படங்கள்: மு.லெட்சுமி அருண்.
பேருந்து வசதி கோரி மணப்படை வீடு கிராம மக்களும், (வலது) அடிப்படை வசதிகள் கோரி குன்னத்தூர் கிராம மக்களும், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

`வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என, கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரிந்த செவிலியர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக செவிலியராக 35-க்கும் மேற்பட்டோர் கடந்த மே மாதம் 18-ம் தேதி முதல் பணியாற்றி வந்தோம். கரோனா தொற்று குறைந்து வார்டு மூடப்பட்டதால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 4-ம் தேதி எங்களை வேலையில் இருந்து விடுவித்துவிட்டனர். தற்காலிக வேலை என தெரிந்தும், ஏற்கெனவே பார்த்த வேலையை விட்டுவிட்டு பணியில் சேர்ந்தோம். எங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

மணப்படைவீடு பேருந்து

‘திருநெல்வேலி டவுனில் இருந்து எங்கள் கிராமத்துக்கு தடம் எண் 12-பி என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. தினமும் 8 முறை இயக்கப்பட்ட இந்த பேருந்து, கரோனா ஊரடங்குக்கு பின்னர் தற்போது முறையாக இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்தை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

ஊராட்சி தலைவர் பதவி

குன்னத்தூரில் வசதியின்மை

பட்டா பெயர் மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in