பாலத்தில் இருந்து தவறி விழுந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு :

பாலத்தில் இருந்து தவறி விழுந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு :
Updated on
1 min read

போச்சம்பள்ளி அருகே பாலத்தில் அமர்ந்து இருந்துபோது தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.

போச்சம்பள்ளி அடுத்த கீழ் மைலம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (42). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர் இரு நாட்களுக்கு முன்னர் கீழ் மைலம்பட்டி அம்மன் கோயில் அருகில் உள்ள கொந்தம்மா ஏரி பகுதியில் உள்ள பாலத்தின் சுவர் மீது அமர்ந்திருந்தார்.அப்போது, அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போச்சம்பள்ளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in