விருதுநகரில் பெண் ஏட்டு கொலை : கணவரிடம் போலீஸார் விசாரணை

பானுப்பிரியா
பானுப்பிரியா
Updated on
1 min read

விருதுநகரில் பெண் ஏட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் அருகே சூலக்கரை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பானுப் பிரியா(31). விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றினார். இவரது கணவர் விக்னேஷ்(37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் முதுகுளத்தூரில் உள்ள பானுப்பிரியாவின் தாய் வீட்டில் தங்கி படிக்கிறார். விக்னேஷ் மதுரையில் அரசு பஸ் நடத்துநராக பணிபுரிகிறார். இவருக்கு பழங்காநத்தத்தில் வீடுகள் உள்ளன. அவரது பெற்றோரும் அப்பகுதியில் வசிக்கின்றனர்.

அதனால் பானுப்பிரியாவை மதுரைக்கு இடம் மாறுதல் கேட்டு வரும்படி விக்னேஷ் வற்புறுத்தினார். இதனால் அடிக் கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பானுப்பிரியா வீட்டுக்கு வந்தார். அப்போது போதையில் இருந்த விக்னேஷுக்கும், பானுப்பிரியாவுக்கும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பானுப்பிரியா வீட்டின் அறையில் பெல்டால் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக விக்னேஷ் உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

சூலக்கரை போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பானுப்பிரியாவை குடும்பத் தகராறில் விக்னேஷ் பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in