

மகப்பேறு விடுப்பு வழங்கும்போது பணி வரன்முறை செய்யப்பட்டவர்கள், வரன்முறை செய்யப்படாதவர்கள் என பெண் ஊழியர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடோ அல்லது பாரபட்சமோ காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 180 நாட்களில் இருந்து270 நாட்களாக அதிகரித்து தமிழகஅரசு கடந்த 2016-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
அரசாணை அமலாகவில்லை
அதில், ‘‘அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்தும், அவை இன்னும் நிலுவையில் உள்ளன. மகப்பேறு விடுப்பு வழங்கப்படவில்லை. எனவே பணிவரன்முறை செய்யப்படாத தற்காலிக ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக அமல்படுத்த அரசுக்குஉத்தரவிட வேண்டும்’’ என கோரி யிருந்தார்.
சமமாகப் பாவிக்க வேண்டும்