நான் திமுகவுக்குச் செல்ல வைத்திலிங்கம்தான் காரணம் : அதிமுக முன்னாள் எம்.பி கு.பரசுராமன் குற்றச்சாட்டு

கு.பரசுராமன்
கு.பரசுராமன்
Updated on
1 min read

நான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்குச் செல்ல முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்தான் காரணம் என தஞ்சாவூர் முன்னாள் எம்.பி கு.பரசுராமன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செய லாளராக இருந்தவர் கு.பரசுராமன். 2014 முதல் 2019 வரை தஞ்சாவூர் தொகுதியில் எம்.பியாக இருந்தார். இவர், அதிமுக மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

இந்நிலையில், கடந்த செப்.29-ம் தேதி கு.பரசுராமன் தனது ஆதர வாளர்கள் சிலருடன், தஞ்சாவூர் திமுக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித் தார். இதைத் தொடர்ந்து, அவரும், அவரது ஆதரவாளர்களும் கட்சி யிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கு.பரசுராமன் தனது இல்லத்தில் செய்தியாளர் களிடம் கூறியது: தஞ்சாவூர் தொகுதியில் 5 ஆண்டுகள் நான் எம்.பியாக இருந்தபோது, பல்வேறு திட்டங்களை நிறை வேற்றியுள்ளேன். இந்தப் பணிகளை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் விடவில்லை. அவரும் மக்களிடம் எடுத்துச் சொல்லவில்லை. எனவே தான், நான் அதிமுகவிலிருந்து விலகி, திமுகவுக்குச் செல்கிறேன். திமுகவில் எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் செல்லவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in