திருவண்ணாமலை அண்ணாநகரில் - குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் :

தி.மலை அண்ணாநகரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து தண்டராம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
தி.மலை அண்ணாநகரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து தண்டராம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
Updated on
1 min read

திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நகர் 9-வது தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் பலனில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலை யில் நேற்று பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. உடனடி யாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். மேலும் அவர்கள் நகராட்சியை கண்டித்து முழக்கமிட்டனர்.

பின்னர், கைகளை கோர்த்துக் கொண்டு சாலையை மறித்து பெண்கள் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவண்ணாமலை நகர காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல் துறையினர், குடிநீர் வழங்குவது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைத்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

இதனால், திருவண்ணாமலை–தண்ட ராம்பட்டு சாலையில் 40 நிமிடங்கள் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in