போக்ஸோவில் இளைஞர்கள் கைது :

போக்ஸோவில் இளைஞர்கள் கைது :
Updated on
1 min read

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

திருச்சுழி அருகே உள்ள கோரைக்குளத்தைச் சேர்ந் தவர் ஆறுமுகம் (23). இவர் பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார்.

மாணவியின் பெற்றோர் புகாரின் பேரில் அருப்புக் கோட்டை மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது தனியார் கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை காட்டி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மறவபட்டியைச் சேர்ந்த காளிமுத்து (34) பாலியல் தொல்லைகளை செய் துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வில்லூர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் அந்த இளைஞரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in